முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 674

 விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்

மறுபடியும் உன் மகனாய்



நான் பிறப்பேன்

அழாதே அம்மா

விதை குழியில்

இருந்து என்னால்

உன் விழி நீர்

துடைக்க முடியவில்லை

அழாதே அம்மா


கருவறையில் சுமந்தாய்

பத்து மாதம் தவமிருந்தாய்

பத்திரமாய் என்னை

நீ வளர்த்தாய்

சுமையென்று நீயும்

என்ன எண்ணியதில்லை

அழாதே அம்மா


நான் வளர்கின்ற போது

பகையின் வஞ்சனை

நான் அறிந்தேன்

உன்னை போல் பல

அம்மாக்களின் விழிகளில்

கண்ணீரும் செந்நீரும்

வடிவதை கண்டேன்

அழாதே அம்மா


தலைவரின் வழியிலே

பலரின் விழி நீர் துடைத்திட

களத்திலே ஆயுதம் ஏந்தி

தலை நிமிர்ந்து நானும்

புலியென நடந்தேன்

அழாதே அம்மா


ஈழ விடுதலைக்கு தானே

நானும் களத்திலே

உயிர் நீத்தேன் அம்மா

விதை குழியில் உறங்குகின்றேன்

என்ன போல் பல பிள்ளைகள்

இங்கே உறக்கம் கொள்கின்றார்கள்

அழாதே அம்மா


துயில்கின்ற வீரரின்

உறக்கத்தை கலைத்து விடாதே

நீயும் அழுது அம்மா

விடுதலைக்காய் மடிந்த

உன் மகன் வீரன் என்று

நீயும் பெருமை கொள்ளு தாயே

அழாதே அம்மா


விதை குழியில் இருந்து

என்னால் எழமுடிய வில்லை

விடிகின்ற தேசத்தில்

விடுதலை வீரனாய் நானிருப்பேன்

என்றும் உன் நினைவுகளிலே

நானும் கலந்திருப்பேன்

அழாதே அம்மா


விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்

மறுபடியும் உன் மகனாய்

நான் பிறப்பேன் உன் மடியில்

நான் தூக்கம் கொள்வேன்

அப்போது நான் வாழ்வேன்

உன் மகனாய் அம்மா

அதுவரையும் நீயும்

அழாதே அம்மா


உன்னை போல் பல அம்மாக்கள்

அழுது கொண்டே இருக்கின்றனர்

அவர்களிடம் போய் சொல்

இனியும் விழி நீர் வேண்டாம் என்று

விடுதலை ஒளி படும் எம் வித்துடல் மீது

அன்று உயிர் பெறுவோம் நாங்கள்

அதுவரையும் நீயும்

அழாதே அம்மா




-சிவா TE

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?