கொரோனாவுக்கு போராடும் இந்தியாவிற்கு 74 கோடி நிதியுதவி அளித்த கனடா பிரதமர்- குவியும் வாழ்த்துக்கள்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகள் உதவிக்கரம் செய்து வருகிறது.
அந்த வகையில், கனடா இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்குகிறோம்.
இது நிச்சயம் ஆம்புலன்ஸ் சேவைக்கும், பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கும் உதவும்” என கூறியுள்ளார். மேலும், எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கருத்துகள்