திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி... பலர் கவலைக்கிடம்: வெளிவரும் பகீர் தகவல்
வடக்கு இஸ்ரேலில் மெரோன் மலையின் அடிவாரத்தில் இடம்பெற்ற மத திருவிழாவில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த Lag B'Omer மத திருவிழாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை "மிகப்பெரிய பேரழிவு" என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் துணை மருத்துவர்களும் சிபிஆரை நிர்வகிக்கும் குழுக்களின் குழப்பமான காட்சிகளை விவரித்தனர், மேலும் இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட மக்களுக்கு பெருமளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளனர்.
கருத்துகள்