முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 718

 அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துங்கள் - கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்துள்ள கரு ஜயசூரிய


 


நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


கொவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் தேவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். இதற்கான முன்மாதிரியை ஆரம்பமாக வழங்குவதற்கு நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அரச தலைவர் முன்வரவேண்டும்.


அதனடிப்படையில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துவகையான பழிவாங்கல்களை நிறுத்தி அனைவருக்கும் நற்புறவான நேசக்கரங்களை ஆரம்பமாக நீட்டவேண்டும். என்றாலும் இவ்வாறான சூழலையை ஏற்படுத்தவேண்டி இருக்கின்றபோதும், நாட்டில் இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் தொடர்பில் எங்களுக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றது.


சத்திர சிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவின் சகோதரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸுக்கு அழைத்து 05.00 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியதியது ஒரு தார்மிக செயலாக கருத முடியாது. இது மனித உரிமையை மீறும் செயலாகும்.


அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லும் முறையை கவனிக்கும்போதும், அவ்வாறான நிலைமையையே காணக்கூடியதாக இருக்கின்றது.


ரிஷாத் பதியுதீன் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைதுசெய்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். அத்துடன் உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் அவருக்கு எதிராக குறிப்பிட்டதொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதை, காணக்கூடியதாக இல்லை.


இவ்வாறான சூழலில் அவருக்கு எதிராக தற்போது ஏதாவது குற்றச்சாட்டு தெரிவிக்க நியாயமான காரணம் இருக்குமானால், அதனை தாமதிக்காது நீதிமன்றம் ஒன்றுக்கு சமர்ப்பித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்த அதிகாரிகளின் பொறுப்பாகும்.


மேலும், ரிஷாத் பதியுதீனை கைதுசெய்யும்போது குறித்த துறையினர் செயற்பட்டிருக்கும் சம்பிரதாய விராேத செயலை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது.


நள்ளிரவு 02.00 மணியளவில் சபாயகருக்கும் அறிவிக்காமல், இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும். அது பாராளுமன்றத்துக்கும் மேற்கொள்ளப்படும் அவமானமாகும். இதன் மூலம் சபாநயகருக்கும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


எனவே இவ்வாறான முட்டாள் தனமான செயல்கள் மூலம் ஏற்படுவது, பயங்கரவாதத்துக்கு எதிராக எமது நாட்டில் பாதுகாப்பு பிரிவு மற்றும் நீதியை வழங்குவதற்கு தலையிடும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு ஆளாகின்றதாகும்.


அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகள் மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைகளுடன் குறுகிய அரசியல் நோக்கங்களை சேர்த்துக்கொள்ளவேண்டாம் என நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரிடமும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.


அதேபோன்று நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு உட்பட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முறையாக வகனம்செலுத்தி, நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


நாங்கள் ஒன்றுபட்டால் எந்தவொரு சவாலுக்கு எமக்கு முகம்கொடுக்கலாம். அதற்காக ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்கவேண்டும். அழிவடைந்த நாடுகள் கட்டியெழுப்பப்படுவது இந்த முறையிலாகும் என்று குறிப்பிடப்பட்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?