முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 661

 ஸ்ரீலங்காவில் சமஷ்டி ஆட்சி ஏற்படலாம் - சுசில் பிரேமஜயந்த ஆருடம்



 

 ஸ்ரீலங்காவில் சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுசில் பிரேமஜயந்த ஆருடம் வெளியிட்டுள்ளார்.


இருப்பினும் ஒருபோதும் தனிநாடொன்று உருவாகாது எனறும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.


சிலர் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிரிவாகின்றதாகவும் தனிநாடு உருவாகின்றது என்றும் விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.


இல்லை, 13ஆவது திருத்தமானது நாட்டில் 9 மாகாணங்களாக பிரிக்கப்படுகின்றது. அதில் ஒன்றாகிலும் பிரிக்கப்பட்டால் நாடு சமஸ்டியாகும் என்பதை ஜே.ஆர் ஜயவர்தன கூறியிருந்தார்.


பிரிவாவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆளுநர் நீக்கப்பட்டால் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கமையவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனால் மாகாண சபைகளுக்கு நிறைவேற்றதிகாரம் இல்லை. அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக குறைக்கவும் முடியும்.


மாகாணங்களுக்கு புறம்பான நீதிமன்றங்கள் இல்லை. மாவட்ட நீதிமன்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் தான் இருக்கின்றன.


ஆகவே மாகாண சபை முறை வரும்போது அன்று கைகளை உயர்த்தியவர்கள் இன்று நாடு பிரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.


எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் சீனக் கொலணியாகாது, தனிநாடாகவும் மாறாது.


தற்போது நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களில் 07 சட்டங்களைத் தவிர 57 சட்டங்கள் அந்தத் திட்டமுள்ள பகுதியில் அமுலாகும் என்றார். 



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?