கரோலின் ஜூரியின் முடிவால் புதிய உலக திருமதி அழகுராணியானார் அயர்லாந்து நாட்டு அழகி
உலக திருமதி அழகுராணி பட்டத்தையும் மகுடத்தையும் தாமாக முன்வந்து ஒப்படைத்த கரோலின் ஜூரியின் முடிவால் இரண்டாவது இடத்தை வென்ற அயர்லாந்து நாட்டு அழகு ராணிக்கு இந்த மகுடம் சொந்தமாகி உள்ளது.
உலக திருமண அழகு ராணியை தெரிவு செய்யும் அமைப்புக் குழு இதை கூறுகிறது.
அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய உலக திருமதி அழகியாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கேட் ஷிண்டர் முடிசூட்டப்படவுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகுராணியை தெரிவு செய்யும் போட்டியில் இடம்பெற்றிருந்த பெரும் சர்ச்சைகளை அடுத்து கரோலின் ஜூரி தமது மகுடத்தை தியாகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்