தமிழீழ தேசிய நாட்டுப்பற்றாளர் நாளும் மற்றும் அன்னைபூவதி அவர்களின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு என்பன குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் 19/04/2021 பிற்பகல் 06 மணிதொடக்கம் 7.30 மணி வரை தியாகதீபம் அன்னை பூவதி அவர்களின் 33ன்றாவது நினைவும் நிகழ்வும் மற்றும் தேசிய நாட்டுப்பற்றாளர் நினைவு நிகழ்வு என்பன குயின்ஸ்லாந்து மாநிலதில் உள்ள woodridge என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத் தேசிய ஒருங்கிணைப்பாளர் குயின்ஸ்லாந்து மாநிலம் திரு மோகன்ராஜ் மற்றும் ரவி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை திரு தாயானந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதை அடுத்து அன்னை பூவதி அவர்களின் பிரதான மலர் மாலையை மாவீரனின் சகோதரியான திருமதி வாணு அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து பிரதீபன்'டெனிஸ் அனுசன். தோமேஸ் பிரவா.சிவா இவர்கள் ஏனைய மாமனிதர்களிற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதியாக அன்னை பூவதி அவர்களின் தியாகம் பற்றி ஈசன் மாநில இணைப்பாளர் அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.
இத்தேசி நினைவஞ்சலிக் கூட்டத்தில் தங்களின் வேலை இரமத்தை பார்க்காமல் கலந்து சிறப்பித்த அணைத்து தேசிய உணர்வாளர்களிற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழீழத் தேசிய ஒருங் இணைப்பாளர்கள் குபின்ஸ்லாந்து மாநிலம். தொடர்பு
www.teminews@gmail.com
கருத்துகள்