பொறுப்பை மஹிந்தவிடம் கையளியுங்கள் - கோட்டாபயவுக்கு ஆலோசனை
இலங்கையின் வீழ்ச்சிடைந்துள்ள அரச இயந்திரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அபயராமை விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அபயராமை விகாராயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,
அரச சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். இது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த ஒருவரான பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்கின்றேன்.
அண்ணனும் தம்பியும் இணைந்து செயற்பட முடியும். அரச இயந்திரம் செயலிழந்துள்ள விடயம் குறித்து அவருடன் இணைந்து ஆராய்ந்து பாருங்கள்.
அமைச்சர்கள் தொடர்பில் நான் பேசவரவில்லை. அவர்கள் என்னிடம் ஒன்றையும், ஜனாதிபதியிடம் ஒன்றையும் கதைக்கின்றனர்.
கொள்கைள் அற்ற இவ்வாறானவர்கள் தொடர்பில் நான் பேசுவதில்லை. இந்த நாட்டை விற்பனை செய்தேனும் அவர்களது அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களது நோக்கம்.
எனினும் மஹிந்த ராஜபக்ச அவ்வாறானவர் அல்ல - நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென நினைக்கும், கட்டியெழுப்பிய ஒருவரே அவர். அவர் தொடர்பில் நான் நன்கு அறிவேன். ஆகவே இவரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அவரே, அண்ணனும் தம்பியும் கலந்துரையாடி செயற்படுவதால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை எனத் தெ
கருத்துகள்