முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 707

 நான்கு கோடி டொலர் செலவில் சிட்னியில் உருவாகும் இந்து ஆலயம்!



ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு மிகப்பெரிய இந்து ஆலயம் சிட்னியில் சுமார் நான்கு கோடி டொலர்கள் செலவில் நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.


Bochasanwasi Akshar Purushottam Sanstha (BAPS)-ஆல் சிட்னி Kemps Creek, Adlington வீதியில் அமைக்கப்படும் இந்த ஆலயம், முழுமையாக நிர்மாணித்து நிறைவுபெறுவதற்கு ஒன்பது வருடங்களாகலாம் என்றும் முதல்கட்ட வேலைகள் 2023 இல் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆலயத்தை வடிவமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள DDC Architecture and Interior Design நிறுவனம், ஆலய நிர்மாணத்துக்கான வடிவத்தை இந்தியாவுக்கு சென்று நுட்பமாக ஆராய்ந்துவந்ததாகவும், இதன்பிரகாரம் ஆலய வரைபடத்தை வடிவமைப்பதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுமார் 25 மீற்றர் உயரத்தில் அமையவுள்ள இந்த ஆலயத்துடன், இரண்டு மாடிகள் கொண்ட இரண்டு சமூக மண்டபங்களும் கட்டப்படவுள்ளன என்றும் அவற்றுடன் வாகன தரிப்பிடம் மற்றும் பூங்காவும் ஆலயத்துடன் இணைந்துகொள்ளும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.


சமூக மண்டபங்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்கானதாக அமையும் என்றும் இந்த மண்டபங்களுடன் அமையவுள்ள சாப்பாட்டு மண்டபம் ஆயிரம் பேரைக்கொள்ளக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஆலயத்தை அமைப்பதற்கு, ஆலயத்தை நிர்மாணிக்கும் நிறுவனம் சிட்னி Penrith City கவுன்ஸிலோடு இணைந்து பணியாற்றியதாகவும் கடந்த மாதம் Sydney Western City Planning Panel இந்த ஆலய நிர்மாணத்திற்கான அனுமதியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?