முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 723

 உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க பயன்படும் உணவு வகைகள் என்னென்ன? இனியும் தவிர்க்காதீர்கள்!



 

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. பல நோயாளிகள் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டால் உயிரிழந்தனர்.


இதனையடுத்து, நமது உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.


மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும்.


ஆனால், நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை போன்றவற்றால், உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.


மேலும், ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஆக்ஸிஜன் தெரபி, உடற்பயிற்சி மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளும் உதவும்.


உணவுகள்

பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரிச்சம் பழம் போன்றவற்றில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.


இந்த பழங்களில் உள்ள pH அளவு 8 ஆகும். பெர்ரிப் பழங்கள், பூண்டு மற்றும் பேரிச்சம் பழம் போன்றவற்றில் உள்ள பண்புகள், இரத்த அழுத்தத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.


மேலும், ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவோம்.


எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும்.


மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக்குகிறது. இந்த எலுமிச்சையை அன்றாடம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.


மாம்பழம், பார்லி, பப்பாளி, தர்பூசணி, சாத்துக்குடி இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. மற்றும் இது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.


இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். பப்பாளி குடலை சுத்தம் செய்து, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். கடல் உணவுகள் மற்றும் இறைச்சிகளில் புரோட்டீன், குறிப்பிட்ட பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.


கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மீன்களில் சூரை, சால்மன் போன்றவற்றில் இரும்புச்சத்தை விட புரோட்டீன் அதிகம் உள்ளது.


சிக்கன் முட்டையில் இந்த இரண்டு சத்துக்களும் மிதமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.


ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளுள் ஒன்று பருப்பு வகைகள். பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜன் செயல்பாட்டிற்கு உதவும்.


மேலும் பருப்பு வகைகளுள் அன்றாடம் தேவையான புரோட்டீன்கள், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. எனவே அன்றாட உணவில் சிறிது பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.          


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?