நான் ஏன் குப்பி அணிந்தேன்.!
எதுக்கு உறவை துறந்து வந்தேன்
நான் ஏன் குப்பி அணிந்தேன்.!
எதுக்கு உறவை துறந்து வந்தேன்
விழிகள் ஒளிர பயணிக்கும்
அவனுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்
திடமற்ற வினாக்கள்.
வினாடி கரையும் முன்னே
கரைந்திடும் கேள்விகள்.
விருட்சமாய் வளர்ந்து நின்ற
வேங்கை அணியின் விழுது அவன்
குப்பியை தடவி பார்க்கும்
கரத்தழுவல்களுக்குள்ளே
ஆழ்ந்து தூங்கி கொண்டிருக்கும்
விசத்தின் உச்சத்தை
அவன் விரும்பியே ஏற்றிருந்தான்.
அவன் கரமும் மனமும்
அடிக்கடி குப்பியுடன்
பேசிக்கொண்டே இருந்தன.
சாவதற்கு வழிகாட்டும் கைகாட்டியிடம்
அதீத பாசம் வைத்தே இருந்தான்
சுத்தி நின்று சூழ்ந்த சூறை காற்றுக்கிடையில்
அவன் காத்து கிடந்தது
தேச விடுதலை பசியோடு
அது அவன் குப்பிக்கும் தெரியும்
அவனின் உயிரை உண்ண காத்து கிடந்தது.
அவனுக்காகவே கருவுதித்த புதுப்பிறப்பு
மனம் முழுக்க வைத்த ஆசையை வளர்த்து
சொந்தம் விட்டு சொந்தமாக கழுத்தில் ஏந்தி
வேறொரு வாழ்வுக்குள் அவன்
புகுந்து விட்டான்
வெண்ணிறமும் மனதை
கொள்ளை கொள்ளும் அழகும்
மிகவும் பிடித்த ஒன்று
அதனால் தான் நெஞ்சுக்குழியில்
குப்பியை ஏற்று மண்ணுக்காய்
அவன் வாழ்ந்தான்.
வஞ்சிகள் சூழ்ந்த பூமியில்
வஞ்சகம் தலைவிரித்தாடிய தேசத்தில்
ஈழ தேசத்துக்கான காத்திருப்பில்
அவன் நீண்ட தூரம் நடந்து கொண்டிருந்தான்
அவனது குப்பி மட்டும் அவனுடனே
எப்போதும் பயணித்து கொண்டிருந்தது
தன் வாய் திறந்து அவன் குருதி குடித்து
விதையாய் தாய் மடியில் வீழ்த்தும் ஏக்கத்தோடு…
கவிமகன்,இ
கருத்துகள்