முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 681

 நான் ஏன் குப்பி அணிந்தேன்.!

எதுக்கு உறவை துறந்து வந்தேன்

நான் ஏன் குப்பி அணிந்தேன்.!

எதுக்கு உறவை துறந்து வந்தேன்

விழிகள் ஒளிர பயணிக்கும்

அவனுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்

திடமற்ற வினாக்கள்.


வினாடி கரையும் முன்னே

கரைந்திடும் கேள்விகள்.

விருட்சமாய் வளர்ந்து நின்ற

வேங்கை அணியின் விழுது அவன்

குப்பியை தடவி பார்க்கும்

கரத்தழுவல்களுக்குள்ளே

ஆழ்ந்து தூங்கி கொண்டிருக்கும்

விசத்தின் உச்சத்தை

அவன் விரும்பியே ஏற்றிருந்தான்.

அவன் கரமும் மனமும்

அடிக்கடி குப்பியுடன்

பேசிக்கொண்டே இருந்தன.


சாவதற்கு வழிகாட்டும் கைகாட்டியிடம்

அதீத பாசம் வைத்தே இருந்தான்

சுத்தி நின்று சூழ்ந்த சூறை காற்றுக்கிடையில்

அவன் காத்து கிடந்தது

தேச விடுதலை பசியோடு

அது அவன் குப்பிக்கும் தெரியும்

அவனின் உயிரை உண்ண காத்து கிடந்தது.

அவனுக்காகவே கருவுதித்த புதுப்பிறப்பு

மனம் முழுக்க வைத்த ஆசையை வளர்த்து

சொந்தம் விட்டு சொந்தமாக கழுத்தில் ஏந்தி

வேறொரு வாழ்வுக்குள் அவன்

புகுந்து விட்டான்


வெண்ணிறமும் மனதை

கொள்ளை கொள்ளும் அழகும்

மிகவும் பிடித்த ஒன்று

அதனால் தான் நெஞ்சுக்குழியில்

குப்பியை ஏற்று மண்ணுக்காய்

அவன் வாழ்ந்தான்.

வஞ்சிகள் சூழ்ந்த பூமியில்

வஞ்சகம் தலைவிரித்தாடிய தேசத்தில்

ஈழ தேசத்துக்கான காத்திருப்பில்

அவன் நீண்ட தூரம் நடந்து கொண்டிருந்தான்

அவனது குப்பி மட்டும் அவனுடனே

எப்போதும் பயணித்து கொண்டிருந்தது

தன் வாய் திறந்து அவன் குருதி குடித்து

விதையாய் தாய் மடியில் வீழ்த்தும் ஏக்கத்தோடு…



கவிமகன்,இ

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?