ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சோனியாவின் மகனின் தற்போதைய சோக நிலை; பாவம் விடுமா!
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
முன்னதாக மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுசமீபத்தில் ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்