முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 700

 இலங்கை விரையும் ரஷ்ய ஹெலிகொப்டர்கள் ? கசிந்தது தகவல்


 

ரஷ்யாவின் உற்பத்திகளில் ஒன்றான எம்.ஐ-171 ரக 04 ஹெலிகொப்டர்களை அரசாங்கம் விரைந்து கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையணிக்கு வாடகைக்கு விடுவதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில்,


இந்த ரக ஹெலிகொப்டரின் விலை ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் என்ற (Rosoboron export) ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து ஹெலிகொப்டர் கொள்வனவை செய்ய பாதுகாப்பு அமைச்சின் கவனம் திரும்பியிருக்கின்றது.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் குறித்த ரஷ்ய நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக எம்.டி.வி நிறுவனத்தின் சொந்தக்காரரான கிலி மஹராஜாவின் மஹாராஜா நிறுவனமே இயங்கிவந்தது.


2400 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்தி மேற்படி ரஷ்ய நிறுவனத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட கப்பலொன்றை கொள்வனவு செய்யவும் இரகசிய கொடுக்கல் வாங்கலைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவே அப்போதைய ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.


எவ்வாறாயினும் அப்போதைய எதிர்க்கட்சியினர் இன்றைய ஆளுங்கட்சியிலுள்ள நிலையில், ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தற்போதைய இலங்கைப் பிரதிநிதியாக ராஜபக்ஷவினரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஊடாக BTR 82A ரக 60 ஆயுத வாகனங்களையும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன - என்றுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?