முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 544 பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்!

விடுதலை புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கிறாரா? பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்! 1954 ஆம் ஆண்டு பிறந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்நிலையில் பிரபல ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கூறுகையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 60 வயது முதல் 70 வயது வரை ஆயுள் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு தொடங்கிய போர் காலங்களில் தலைவர் பிரபாகரன் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிர போரில் அவர் உயிரழந்தது உறுதி என ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அப்படியே அவர் உயிரை இழக்கவில்லை என்றால் 2015 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு வந்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

d 543 ஜேர்மன் பிரஜையால் தரைமட்டமாக்கப்பட்ட வீடு

தமிழர் பகுதியில் ஜேர்மன் பிரஜையால் தரைமட்டமாக்கப்பட்ட வீடு; வீதியில் நிற்கும் குடும்பம்! கிளிநொச்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வசிக்கும் ஓர் குடும்பத்தினரின் வீட்டை,வெளிநாட்டு பிரஜை ஒருவர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பரந்தன் 3ஆம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை, ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் ஜே.சி.பி வைத்து அவர்களது வீட்டை இடித்து தரைமட்டமாகியது மற்றுமன்றி குடும்ப உறுப்பினர்களை மதுவிற்கு அடிமையானவர்களின் உதவியுடன் கடத்தி அவர்களை அடித்து மிரட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய சம்பவ இடத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ் யுவராஜா பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். “இந்த குடும்பத்தினர் காலையில் எனது அலுவலகம் தேடி வந்து அவர்களுடைய காணி பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு முன் வைத்தனர். ஜேர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர் இவர்களது வீடு இருந்த காணி அவருடையது என கூறி இந்த குடும்பத்தினரின் வீட்டை இடித்த

d 542 உன்மையை உறுதிப்படுத்திய சீமான்

நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து மேலும் கருது தெரிவித்த அவர், ' '2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பது சிறிலங்கா இராணுவத்தின் அறிவிப்பு இதற்கு சாட்சியமாக பிரபாகரன் உடலை காட்டியது சிறிலங்கா இராணுவம். இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன் நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் | Ltte Chief Prabhakaran Seeman Reveals Surrender ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் மரணம் அடையவில்லை என கூறி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். இதனை பிரபாகரன் குடும்பத்தின் அனுமதியுடன்

d 541 பௌத்த பிக்குககள் ஏன் குழம்புகின்றார்கள்,அதிபர் ரணில்

பௌத்த பிக்குகளின் போராட்டத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை - அதிபர் ரணில்! "13 ம் திருத்த சட்டதை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை" இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் பௌத்த பிக்குகள் கொழும்பில் 13 ம் திருத்தத்தின் பிரதியை எரித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில், ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அதிபர் ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதிபர் ரணில் பௌத்த பிக்குகளின் போராட்டத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை - அதிபர் ரணில்! | Ranil Said About Protest Against 13Th Amendment மேலும் கருத்துரைத்த அவர், "இந்த நாட்டில் மதிக்கப்பட வேண்டிய பௌத்த பிக்குகளின் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் மகாநாயக்கர்களை சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டதை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும், அதன்மூலம் ஏற்படும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் தெளிவாகக் கூறியிருந்தேன்.

d 540 அன்று தலைமகன் சொன்னது என்ன?

திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு காலத்தின் தேவை கருதி .! ஏமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு உள்நாட்டுநெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தைஈர்க்கும் ஒரு சர்வதேச நெருக்கடியாக விஸ்வரூபம் கொண்டுள்ளது. சிங்கள அரசானது எம் முடன் தனித்து நின்று போராடவில்லை.ஏகாதிபத்திய நாசகார சகதிகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அனிைத்திரட்டி எமது மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வருகிறது எமது கோரிக்கை என்ன ? எமது அரசயல் இலட்சியம் என்ன என்பதில் நாம் மெளனமாக இருந்துவிடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம். நாம் ஒரு தேசிய இனம் என்ற ரீதியிலும், வரலாற்று ரீதியாக அமைந்த எமது பரம்பரை தாயக பூமி எமது சொத்துடமை என்பதாலும் எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக் குண்டு. இந்த

d 539 பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது

நீங்கள் இரவு வேளையில் வேலை பார்ப்பவரா? அப்போது உங்களுக்கு இந்த நோய் இருக்குமாம் பொதுவாக அலுவலகங்கள் அல்லது கம்பனிகளில் வேலை பார்க்கும் போது இரவு வேளைகளில் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். இதனால் நாளடைவில் நமக்கும் பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஆம், நாம் எங்கு வேலை பார்த்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலானோர் இரவு வேளைகளில் வேலை பார்க்க மாட்டார்கள். காரணம், காலையில் நேரத்திற்கு எழும்ப முடியாது, ஒரு நிறைவான தூக்கம் இருக்காது, கண் கருவளையம் இருக்கும், மன உளைச்சல் இருக்கும், நிம்மதி இருக்காது என பல பிரச்சினைகளை நினைவில் வைத்து தான். இவையனைத்தையும் விட இரவில் வேலைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது. மேலும் மாரடைப்பு பிரச்சினையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இரவு நேரத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு என்ன நடக்கும், அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்

d 538 ஐயாவிற்கு ஒரு பணிப்புரைஜெகத் கஸ்பார்

மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை இறையாண்மை அற்று அநாதைகாளக இருந்த தமிழினத்தை இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த அளவிற்கு இழிவுபடுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது. இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார் அருட்பணி ஜெகத் கஸ்பார் அடிகளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுடன் நிற்க வைத்த மாபெரும் தலைவர் மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை | Why Are You Insulting The Great Historical Leader தனது மனைவி மற்றும் மகள், மகன் என அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சகல வசதி வாய்ப்புகள் இருந்தும் அதனை மறுத்து அவர்களை மக்களோடு மக்களாக நிற்க வைத்த மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அதனைவிட அவரது சகோதரர்கள் எவருமே விடுதலைப்புலிகளின் கட்டளை அமைப்பில் எந்தப்பிரிவிலும் வராதவர்கள்.எனவே இப்படி கட்டளை பிரிவில் எதிலும் வராத அவர்களது சகோதரர்களை நம்பி