முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 289

 சூடுபிடிக்கும் சினேகா மார்க்கெட்.. ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் வாங்கும் புன்னகை அரசி





தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

 

திருமணத்திற்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என பல்வேறு பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.


அந்த வகையில் சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன.


பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம்.


அந்த வகையில் விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லட்சம் வரை வாங்குகிறாராம். அதேபோல் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை வாங்குவதாக செய்திகள் வந்துள்ளன.


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப வரும் எல்லா வாய்ப்புகளையும் அள்ளிப்போட்டு வருகிறாராம் சினேகா. வயதானாலும் சில நடிகைகள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்க மாட்டார்கள். அந்த வகையில் புன்னகை அரசி சினேகாவுக்கு நிரந்தர இடமுண்டு. இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு தளதளவென இருக்கிறாரே.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?