முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 273

 5 லட்சம் கடந்த உயிரிழப்பு – வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்



 


அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்.


கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானோர் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் பலியாகினர்.


இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5 லட்சம் பேர் பலியானதையொட்டி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்திகளை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாப் ஆகியோரும் கொரோனாவில் இறந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர்.


2 நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜோ பைடன், கொரோனாவால் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு நாடு முழுவதும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:


இன்று நாம் உண்மையிலேயே கடுமையான, இதயத்தை உடைக்கும் மைல்கல்லை குறிக்கிறோம். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். சாதாரண அமெரிக்கர்கள் என்று வர்ணிக்கப்படும் மக்களை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்களைப் பற்றி சாதாரணமாக எதுவும் இல்லை.


அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆயினும் சரி, அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தவர்கள் ஆயினும் சரி, நாம் இழந்தவர்கள் அனைவருமே அசாதாரணமானவர்கள். அவர்கள் தலைமுறைகளைப் பரப்பினார்கள்.

நம் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கும் நபர் திடீரென நம்முடன் இல்லாமல் போவதின் வேதனை எனக்கு புரியும். 1972-ல் கார் விபத்தில் எனது மனைவி மற்றும் மகளை இழந்தேன். 2015-ம் ஆண்டில் மூளை புற்றுநோயால் எனது மகன் இறந்தார்.


ஆனாலும் ஒரு தேசமாக இத்தகைய கொடூரமான விதியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. துக்கத்துக்கு உணர்ச்சியற்றவர்களாக இருப்பதை நாம் எதிர்க்க வேண்டும். இன்று நான் எல்லா அமெரிக்கர்களையும் நினைவில் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். நாம் இழந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்‌. நம்மை விட்டுச் சென்றவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.‌


கொரோனா உயிரிழப்பை தடுக்க மிகவும் முயன்று வருகிறோம். இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஒவ்வொருவரின் உயிரும் காக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம் என தெரிவித்தார்.





ஐந்து லக்சம் தமிழர்களையும் ஐம்பதினாயிரம் போராளிகளையும் எமது தாய் 

நாட்டிற்காக நாம் இழந்தோம் அவர்களின் கவலைதான் எங்களிற்கும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?