முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 272

 இறுதிவரை ஒருபுலி

உயிரோடு இருக்கும்வரை…

தமிழன்கை போராடும்..!




சோறு கிடைக்கும் இடத்தில் 

சுருண்டு படுப்பதற்கு 

நாயல்ல நாம்…

வீறு குலையாத 

தமிழன் பரம்பரையில் வந்த 

வீரத்தமிழர்கள்..தமிழ்

ஈழத்தமிழர்கள்…நாமடா..!


ஆறுபடையுடன் போரை நடாத்தியே

அந்நியச் சிங்களவன் கால்கள்..

தமிழ்மண்ணில்..

அடியெடுத்து 

வைத்தபோதெல்லாம்

கூறு ..கூறாய் வெட்டிச்சரித்த 

வீரப் பிரபாவின் 

தீரப்படையணி நாமடா..!


சேறு மிதிப்பது போலவர் 

குருதியில் குளித்து 

பலகாலம் தமிழரின் 

வீர வரலாற்றை..

எழுதிய வேங்கைகள் நாமடா..!


ஆறும்.. ஆறுமடா ..வன்னியில் 

விழுந்தநம் 

காயம் ஆறுமடா..!

தமிழ் 

புலியின் காயம் ஆறிட…

போரில் புதுநெறி வகுத்துநாம்

புறப்படும் போதிங்கே 

நரிகளின்…

வாலில் திரியினைக் கொழுத்திநாம்

விரட்டி அடிப்பது உறுதியடா…!


நாயென…நரியென 

வாழ்ந்திடும் வாழ்வொரு வாழ்வா..?

ஈழத்..

தாயெமை வீரப்பால் ஊட்டித்தான் 

வளர்த்தவள்…

என்பதை அறியாயோ..?


வாய்மையும் வீரமும் 

நம்முடன் கூடவே

வந்து பிறந்தவை..என்பதை 

அறியாத சிங்களவன் 

காயுடன் பிஞ்சினை..

பூவினை அழித்தது

கலங்கிநாம் அழுவதற்கல்ல..மீண்டும் 

துலங்கி நாம் எழுவதற்கு …

என்றறி தம்பி..!


இழந்தது அதிகம்தான்…

இழப்புக்களை கணக்குப் பார்க்க 

இதுநேரம் அல்ல..

மாற்றானிடம் அடிமைப்பட்டு 

காலமெல்லாம் மானத்தை இழப்பதைவிட…

நம்முடலின் குருதியை மீண்டும் 

பாத்திகட்டி இறைத்து

பயிர் வளர்ப்போம்.

“தமிழ் ஈழம்” என்னும்..

பயிர் வளர்ப்போம் …தளராதே தம்பி..


“வீரப் பிரபாவின் தீரப் படையணி நாமடா”



-மு.வே.யோகேஸ்வரன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?