முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 293

 சாத்வீக வழியில் போராடும் அம்பிகைக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவளிக்க அழைப்பு




எமது உரிமைக்காக தன்னைத் தானே வருத்தி சாத்வீக வழியில் போராடும் அம்பிகையின் போராட்டத்துக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் ஒரு தீர்மானத்தை பிரித்தானியா ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வில் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லண்டனில் இன்று சனிக்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டுமென எனது ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் இல்கைக்கு கால அவகாசத்தை வழங்கி உள்ளக பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்பை வழங்கி தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையே பிர்த்தானியா தற்போது சமர்ப்பிக்கும் தீர்மான வரைபு என்ற அம்பிகையின் நியாயமான கவலையையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


இலங்கையை சர்வதேசத்துக்கு பாரப்படுத்தும் பொறுப்பை ஐ.நா பொதச் சபைக்கும் பாதுகாப்பு சபைக்கும் வழங்கும் வகையிலான தீர்மானத்தையும் இனப்படுகொலை,போர்க்குற்றம்,மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் ஆகியவை தொடர்பில் சர்வதேச,சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே நிலம்,புலத்தில் வாழும் ஒட்டு மொத்த தமிழ் மக்களினதும் கோரிக்கை ஆகும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பிகை மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரித்தானியா செவிமடுக்க வேண்டும் என்பது எங்ள் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.


எமது உரிமைக்காக தன்னைத் தானே வருத்தி சாத்வீக வழியில் போராடும் அம்பிகையின் போராட்டத்துக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.


அம்பிகை தனது போராட்டத்தில் வெற்றிபெற்று தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளுக்காக போராட எல்லாம் வல்ல அன்னை பராசக்தி ஆசீர்வதிப்பாராக என்றுள்ளது.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?