முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 229

 புலிகள் மீது சேறடிப்பில் BBC தமிழ் ஓசை: இந்திய உளவுத்துறையின் ஆசைகளை நிறைவேற்றுகிறதா ?




டெல்லியில் உள்ள இந்திய உளவுத்துறையின் பின்னணியில், BBC தமிழ் ஓசை தற்போது இயக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால் தேடிப் பிடித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதும். புலிகள் மீது சேறடிப்பதிலும் தான் இவர்கள் முழுக் கவனமும் இருக்கிறது. பிரித்தானியாவில் உள்ள சுமார் 4 லட்சம் தமிழர்கள் TV லைசன்ஸ் கட்டுகிறார்கள்.



 

அந்த காசில் பிழைப்பு நடத்தும் BBC தமிழ் ஓசை, எப்படி தமிழர்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகிறது என்பது பெரும் ஆச்சரியத்துக்கு உரியது. சமீபத்தில் இலங்கை நாடாழுமன்றில் புலிகள் தொடர்பாக இனி பேச முடியாது என்று இலங்கை அமைச்சர் கூறியதாக BBC தமிழ் ஓசை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொரோனா கால கட்டத்தில், எத்தனையோ செய்தி இருக்கிறது.


ஆனால் இலங்கை அமைச்சரிடம் BBC தமிழ் ஓசை ஏன் புலிகள் தொடர்பாக கேள்விகளை கேட்க்க வேண்டும் ? அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக நாட்டில், ஒரு ஜனநாயக பாராளுமன்றில் அவர்கள் விரும்பியதை பேசலாம். அதற்கு தடை விதிக்கும், இன வாதிகள் சொல்லும் கருத்தை முன் நிலைப்படுத்தி எப்படி BBC தமிழ் ஓசை எழுத முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?


எனவே பிரித்தானிய தமிழர்களே , எமது வரிப் பணத்தில் வயிறு வளர்த்துக் கொண்டு எம்மீது சேறடிக்கும் இந்த ஊடக தலைமை மீது ஒவ்வொரு மானமுள்ள பிரித்தானிய தமிழர்களும் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி என்றால் தான் இந்த BBC தமிழ் ஓசையில் வேலை பார்க்கும் நபர்களை , BBC தலைமை சில விளக்கங்களை கோரும். அனைவரும் BBC தலைமை செயலகத்திற்கு முறைப்பாட்டை அனுப்பி வையுங்கள்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?