புலிகள் மீது சேறடிப்பில் BBC தமிழ் ஓசை: இந்திய உளவுத்துறையின் ஆசைகளை நிறைவேற்றுகிறதா ?
டெல்லியில் உள்ள இந்திய உளவுத்துறையின் பின்னணியில், BBC தமிழ் ஓசை தற்போது இயக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால் தேடிப் பிடித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதும். புலிகள் மீது சேறடிப்பதிலும் தான் இவர்கள் முழுக் கவனமும் இருக்கிறது. பிரித்தானியாவில் உள்ள சுமார் 4 லட்சம் தமிழர்கள் TV லைசன்ஸ் கட்டுகிறார்கள்.
அந்த காசில் பிழைப்பு நடத்தும் BBC தமிழ் ஓசை, எப்படி தமிழர்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகிறது என்பது பெரும் ஆச்சரியத்துக்கு உரியது. சமீபத்தில் இலங்கை நாடாழுமன்றில் புலிகள் தொடர்பாக இனி பேச முடியாது என்று இலங்கை அமைச்சர் கூறியதாக BBC தமிழ் ஓசை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொரோனா கால கட்டத்தில், எத்தனையோ செய்தி இருக்கிறது.
ஆனால் இலங்கை அமைச்சரிடம் BBC தமிழ் ஓசை ஏன் புலிகள் தொடர்பாக கேள்விகளை கேட்க்க வேண்டும் ? அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக நாட்டில், ஒரு ஜனநாயக பாராளுமன்றில் அவர்கள் விரும்பியதை பேசலாம். அதற்கு தடை விதிக்கும், இன வாதிகள் சொல்லும் கருத்தை முன் நிலைப்படுத்தி எப்படி BBC தமிழ் ஓசை எழுத முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?
எனவே பிரித்தானிய தமிழர்களே , எமது வரிப் பணத்தில் வயிறு வளர்த்துக் கொண்டு எம்மீது சேறடிக்கும் இந்த ஊடக தலைமை மீது ஒவ்வொரு மானமுள்ள பிரித்தானிய தமிழர்களும் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி என்றால் தான் இந்த BBC தமிழ் ஓசையில் வேலை பார்க்கும் நபர்களை , BBC தலைமை சில விளக்கங்களை கோரும். அனைவரும் BBC தலைமை செயலகத்திற்கு முறைப்பாட்டை அனுப்பி வையுங்கள்.
கருத்துகள்