முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 217

 கனடாவில் கொட்டும் பனியில் தேசிய கொடிகளோடு கார் போராட்டம்: மானத் தமிழண்டா என்ற முழக்கம்


பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியல் ஆகிய இடங்களில் நடந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.


எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன. 24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில் நடந்த இந்த வாகன பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.


கனடாவில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் ஈழத்தில் இடம்பெற்ற நீண்ட எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியவை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு மற்றும் நீதியை அனத்துலகத்திடம் நாடி நிற்கின்றன.


இந்த வாகன பேரணிகள் மற்றும் நீண்ட எதிர்ப்பு அணிவகுப்புகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.


தமிழ் மக்களின் பாரம்பரிய தயகத்தில் இடம்பெற்ற 700 இற்கும் மேற்பட்ட கி.மீ நீளமுள்ள போராட்ட அணிவகுப்பு, சர்வதேச சமூகத்தை தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த நிரந்தர அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுதலை தடுக்கவும் மற்றும் அதனத்தொடர்ந்து இடம்பெறக்கூடிய போரையும் தடுக்க கூடியது.


கனடியத் தமிழ் ஊடகங்கள் மற்றும் கனேடிய பிரதான ஊடகங்கள் ஆகியவை இந்த பேரணியின் விபரங்களை மக்களுக்கு எடுத்துச் சென்றது.இந்தப் பேராட்டம் வெற்றி பெற செயலாற்றிய அனைத்து அமைப்பிற்கும், செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் தொண்டர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை நன்றி தெரிவிக்கின்றது. இந்த குறுகிய கால அழைப்பை ஏற்று வாகனப் பேரணியில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி

கனடியத் தமிழர் தேசிய அவை








கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?