தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தமிழீழ உறவுகளால் நடைப்பயணம் ஊடாக மாபரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருவதை யாவரும் அறிவோம்.
அவ்வகையில் அவுஸ்திரேலியரவில் உள்ள அனைத்து மானிலங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தாயக மக்களின் போராட்டத்திற்கு இணை ஆதரவாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட மாபெரும்கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 06 / 02 /2021 அனைத்து மானிலங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
அவ் வகையில்அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மானிலத்தில் மூத்த தேசியச் செயல்ப்பாட்டாளர்களின் பூரண ஆதரவோடு அதிகம் தாய்நாடு மற்றும் மக்கள் மீது பற்றுக்கொண்ட எமது உறவுகளால் மிகவும் சிறப்பான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
கொட்டும் வெய்லிலும் குயின்ஸ்லாந்து மானிலம் பிரதான நகர்பகுதியில் அவுஸ்திரேலியா காவல்துறை யினரின் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறது.
கருத்துகள்