முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 291

 விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே! மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

 




 

விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே!

எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கெளரவிக்கப்பட வேண்டியவர்கள், தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்கள் பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.


நீண்டகாலமாகவே போராட்டத்தின் பெரும் பளுவைப் பொதுமக்களே சுமந்து வருகிறார்கள். சாவும், அழிவும், பசியும், பட்டினியும், இரத்தமும், கண்ணீருமாக எமது மக்கள் எதிர்கொண்ட தாங்கொண்ணாத் துன்பத்தைச் சொற்களில் சித்தரிக்க முடியாது.


உலகில், எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே. ஏனென்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விடப் பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒரு பொழுது வெற்றியளிப்தில்லை.


மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது. ஏனென்றால், விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக, உயிர் மூச்சாக இயங்குகிறது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.


“எனது மக்களின் விடுதலைக்காக” நூலிலிருந்து



“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?