சிறுவர்களை வைத்து ஆபசப் படம் தயாரித்த கனடா தமிழன் மணிமாறன் கைது செய்யப்பட்டது எப்படி ?
கனடா நாட்டில் உள்ள விட்பி என்னும் பகுதியில் வசித்து வந்த தமிழரான கார்த்திக் மணிமாறனை பொலிசார் அதிகாலை தடாலடியாக கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. ஸ்னப்- சட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு கணக்குகளை பாவித்து சிறுவர்களின் ஆபாசப் படங்களை இவர் தரவேற்றம் செய்து வந்துள்ளார். சிறுவர்கள், சிறுமியர்களை இவர் எவ்வாறு அணுகி அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டார் என்பது இன்று வரை கண்டு பிடிக்கப்படவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க.
பலரது புகைப்படங்கள் இவர் வசம் இருந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் கார்த்திக்கை கனடா பொலிசார் வலை வீசி தேடி வந்த நிலையில். அவர் ஒரு வீட்டில் இருப்பதைஐ ஐ.பி இலக்கம் மூலம் அறிந்த பொலிசார் விரைந்து சென்று அவரை கைதுசெய்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.
கார்த்திக் மணிமாறனால் பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும். அவர்கள் தயக்கம் இன்றி முன் வந்து தகவல்களை வழங்க வேண்டும் என்றும் பொலிசார் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிறுவர் ஆபாசங்களை வைத்திருத்தல், சிறுவர் ஆபாசத்தை அணுகுவது மற்றும் சிறுவர் ஆபாசத்தை விநியோகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மணிமாறன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்