முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 276

 

16.01.1985 அன்று முல்லைத்தீவு முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட நாள் இன்று!

IN ஈழப்படுகொலைகள் 
16.01.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட 17 உறவுகளின் நினைவு நாள் இன்றாகும்.
இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றிக் கூறியதாவது:
“அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், சிலரது வீடுகளை எரித்து சொத்துக்களையும் சூறையாடினர். பின் கைது செய்தவர்களை அருகிலிருந்த காடு நோக்கிக் கொண்டு சென்றனர். பின் பல சூட்டுச் சத்தங்கள் கேட்டது. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் அதன் மேல் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர்.
அடுத்தநாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்த்தபோது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒரு துணி இல்லாத சடலங்களாகக் கிடந்தது. அவர்களது உடலை எடுத்துச் செல்லக்கேட்டபோது அவர்களைக் கொட்டி (புலிகள்) என்று கையெழுத்திட்டாலே கொண்டு போகமுடியும் என்றனர். அவர்கள் எல்லோரும் பொதுமக்கள் தவறாக கையெழுத்திட்டு உடல்களை பெற விரும்பாததால், அங்கு விட்டுவிட்டு வந்தோம்.”
16.01.1985 அன்று முள்ளியவளைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. நாகரெட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா
02. குமாரசாமி விஜயகுமாரி (வீட்டுப்பணி)
03. பிலிப்பையா அன்ரன்யோகராசா (வயது 17 – கடற்தொழில்)
04. தம்பையா விவேகானந்தம் (மாணவன்)
05. மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி (வயது 19 – கடற்தொழில்)
06. செல்லத்துரை நவரட்ணம் (விவசாயம்)
07. செல்லத்துரை குமாரசாமி (விவசாயம்)
08. சுப்பன் சின்னன்
09. சின்னன் அன்னலட்சுமி (வீட்டுப்பணி)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?