முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 263

 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது





தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின்   செயலாளர் செ. கஜேந்திரன்.


தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.


இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:


“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் வெற்றிகரமாக மக்கள் எழுச்சி போராட்டமாக இடம் பெற்றது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.


இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ. நா. வின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க வேண்டும். ‘சுமந்திரனின் இந்தத் துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவே எம்.கே.சிவாஜிலிங்கமும் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தரப்புக்கள் கூடித்தான் இந்தப் பேரவையை அமைக்கின்றன. இது முழுக்க முழுக்க கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி தாங்கள் செய்யும் துரோகத்தை மறைக்கும் விதமாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.


தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அந்தக் கூட்டில் இருந்து கொண்டு கோட்டாபயவை பாதுகாப்பதற்காக நாடகமாடுகிறார் என்பதே எமது கருத்து” என்றார்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?