யாழில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த கள்ளி!! 19 பவுண் நகைகளுடன் கைது
அடிக்கடி சென்றுவரும் வீட்டில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்..! யாழ்.பருத்துறையில் சம்பவம், பெண்ணும் அவருக்கு உதவியவரும் விளக்கமறியலில். யாழ்.பருத்துறை பகுதியில் வீடொன்றில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்ணையும்,அவருக்கு உதவிய ஆணையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே அந்தப் பெண் திருட்டில் ஈடுபட்டுள்ளார். பருத்தித்துறைநகரில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் காணாமற்போயிருந்தன.அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 19 பவுண் தங்க நகைளைக் காணவில்லை என்றும்
தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் ஒருவரில் சந்தேகம் உள்ளது என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை குற்றத் தடுப்பு பொலிஸார், முறைப்பாட்டில் சந்தேக நபராகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெண்ணை நேற்றுக் கைது செய்தனர்.
கருத்துகள்