முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 218

 கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசக் குவியும் உறவினர்கள்!




கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் அவர்களது உறவினர்கள் பேசும் நிகழ்வு அதிகரித்து வருகிறது!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பொது மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் மரபியல் ரீதியாக மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றானது பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா சற்றே ஓய்ந்த நிலையில், இரண்டாவது அலை தற்போது மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதால், தங்களது பாசத்துக்குரிய நபர்களை இழந்தவர்கள் கடுமையான சோகத்துக்கும், தனிமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் அவர்களது உறவினர்கள் பேசும் நிகழ்வு பிரிட்டனில் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் வசிக்கும் ஜிம் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி கேட்டுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜிம் மட்டும் உயிரிழந்துள்ளார்.

 

கொரோனாவில் இருந்து பிழைத்த கேட், தனது கணவரின் இழப்பை தாங்க முடியாமல் தனிமையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் தனது நண்பர் ஒருவர் மூலம், ஆவிகளுடன் பேசும் ஜூன் ஃபீல்ட் என்பவரை சந்தித்து, தனது கணவர் குறித்து விசாரித்துள்ளார். தனது கணவர் பயத்தில் இருக்கிறாரா என்று கேள்வியை முன் வைத்த அவரிடம், ஆம், முதலில் உங்களது கணவர் பயத்தில் இருந்தார். ஆனால், தற்போது ரிலாக்ஸாக இருக்கிறார் என்று ஜூன் ஃபீல்ட் தெரிவித்துள்ளார். இதனால், சற்று நிம்மதியடைந்து வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப கேட் முயன்று வருகிறார்.


முன்னதாக, முதல் உலகப்போரின் போது, தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த ஏராளமானோர் அவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆவிகளுடன் பேசும் நபர்களை அணுகத் தொடங்கினர். அதுபோன்று, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரிப்பதற்காக ஆவிகளுடன் பேசும் நபர்களை தற்போது தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?