முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 230

 மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஏசி மெக்கானிக் 2 குழந்தைகளைக் கொன்று தூக்கிட்டு தற்கொலை!






சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவி இறந்து ஒரு மாதமே ஆன நிலையில், துக்கம் தாளாமல் சோகத்தில் இருந்த ஏசி மெக்கானிக் ஒருவர், தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 

கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் வசித்து வந்தவர் வினோத் (32). இவர் ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு கவின் (எ) நவீன் (3), பிரவீன் (எ) சக்தி (1) என்கிற 2 குழந்தைகள் இருந்தனர்.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வினோத், தன் மனைவி கவிதாவுடன் பொன்னேரியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கவிதா தாய் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.


மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பணிக்கும் செல்ல முடியாமல், மனைவியின் நினைவாகவே வினோத் வாடிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்த வினோத் நேற்று நள்ளிரவு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.


இதையடுத்து தனது இரு குழந்தைகளையும் கொன்ற அவர், வீட்டிலுள்ள மின்விசிறி மாட்டும் கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் வினோத்தின் உடல் இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஆர்.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வினோத் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?