யாழில் குடும்ப வன்முறையால் பச்சிளம் குழந்தை பலி
யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார்.
காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை.
யாழில் குடும்ப வன்முறையால் பச்சிளம் குழந்தை பலி | Verbal Argument Between Husband And Wife
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் தெற்கு மிருசுவிலைச் சேர்ந்த பிரகாஷ் காருண்யா (7 மாதம் ) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்