மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை - காவல்துறை அச்சுறுத்தல்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம்(6) சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.
காவல்துறை அச்சுறுத்தல்
மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை - காவல்துறை அச்சுறுத்தல் | Maveerar Day Memorial 2022 Legal Action Police
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் 27ஆம் திகதி (27-11-2022) மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு வருகிறது.
சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்லப் பகுதிக்கு வந்த அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து அடம்பன் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கிருந்து சென்றனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்