முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 148 கவிஞர் காசிஆனந்தனின் வேண்டுகோல்

விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை!
இலங்கையில் சிறிலங்கா அரச ஆதரவுடன் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்கும் போலியான கட்டமைப்புகள் மக்களை குழப்பி வருவதாக தமிழகத்தில் கவிஞர் காசிஆனந்தன் தலைமையில் இயங்கும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர் அமைப்புகள் தாயக விடுதலையை நேசிக்கும் தமிழ் மக்களை குழப்பி வருவதான குற்றச்சாட்டைத் தொடுத்துள்ள ஈழத் தமிழர் நட்புறவு மையம், இந்த நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனுடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழர் தாயக கொள்கைகளுக்கு களங்கம் விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை! | Sri Lanka Government Support Ltte Tamilnadu India மேலும் புதிது புதிதாக உருவாகும் சில தமிழ் அரசியல் அமைப்புகள் சிறிலங்கா புலனாய்வு அமைப்பு மற்றும் புலம்பெயர் நாடுகளின் சில புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு தமிழர் தாயகத்தின் விடுதலைக் கொள்கைகளை களங்கப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலியாக இயங்கும் சில குழுக்கள் போதைப்பொருள் வணிகம் உட்பட்ட சமுக சீரழிவு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை! | Sri Lanka Government Support Ltte Tamilnadu India அதேபோல போலியான தமிழ் அரசியல் குழுக்களுடன் இந்திய அரசாங்கம் தொடர்பாடல்களை பேணுவதை தவிர்க்கவேண்டுமெனவும் கோரியுள்ளது. இந்த விடயத்தை இந்தியா கணக்கில் எடுக்காமல் செயற்பட்டால் ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் கசப்பும் விரக்கதியுமே எஞ்சும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?