விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை!
இலங்கையில் சிறிலங்கா அரச ஆதரவுடன் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்கும் போலியான கட்டமைப்புகள் மக்களை குழப்பி வருவதாக தமிழகத்தில் கவிஞர் காசிஆனந்தன் தலைமையில் இயங்கும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர் அமைப்புகள் தாயக விடுதலையை நேசிக்கும் தமிழ் மக்களை குழப்பி வருவதான குற்றச்சாட்டைத் தொடுத்துள்ள ஈழத் தமிழர் நட்புறவு மையம், இந்த நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனுடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தாயக கொள்கைகளுக்கு களங்கம்
விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை! | Sri Lanka Government Support Ltte Tamilnadu India
மேலும் புதிது புதிதாக உருவாகும் சில தமிழ் அரசியல் அமைப்புகள் சிறிலங்கா புலனாய்வு அமைப்பு மற்றும் புலம்பெயர் நாடுகளின் சில புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு தமிழர் தாயகத்தின் விடுதலைக் கொள்கைகளை களங்கப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலியாக இயங்கும் சில குழுக்கள் போதைப்பொருள் வணிகம் உட்பட்ட சமுக சீரழிவு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எச்சரிக்கை
விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு - இந்தியாவிற்கு எச்சரிக்கை! | Sri Lanka Government Support Ltte Tamilnadu India
அதேபோல போலியான தமிழ் அரசியல் குழுக்களுடன் இந்திய அரசாங்கம் தொடர்பாடல்களை பேணுவதை தவிர்க்கவேண்டுமெனவும் கோரியுள்ளது.
இந்த விடயத்தை இந்தியா கணக்கில் எடுக்காமல் செயற்பட்டால் ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் கசப்பும் விரக்கதியுமே எஞ்சும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்