முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 151 அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் மரணம் நடந்தது என்ன?

கன்பராவில் தமிழ்ச்சிறுவனைக் காணவில்லை! தாயும் சகோதரனும் குளத்திலிருந்து சடலமாக மீட்பு!!
கன்பரா Gungahlin-இலுள்ள Yerrabi குளத்தில் தாய் மற்றும் மகன் ஒருவரது சடலங்கள் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுவனைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மற்றொரு மகன் என நம்பப்படுகிறது. காணாமல்போன 8 வயதுச் சிறுவனின் பெயர் பிரணவ் விவேகானந்தன் எனவும், இவர் Yerrabi குளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும், இவரை யாரேனும் பார்த்திருந்தால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். Advertisement இச்சிறுவன் orange நிற T-Shirt மற்றும் இள நிறத்தில் காற்சட்டை அணிந்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை Yerrabi குளத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் ஆகியோரின் மரணம் தொடர்பில் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தகவல்கள் பெறப்படுவதாகவும், இம்மரணங்களின் பின்னணி இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்ட Yerrabi குளம் அமைந்திருப்பது கன்பரா வடக்கிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமென்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு ACT பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?