75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத ஒழிப்புச் சட்டம், ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் ஆகியன தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனை ஜனவரி அல்லது பெப்ரவரியில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார்.
தமிழ் கைதிகள் விடுதலை
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு | Resolution Of Tamil Problem Before Independence
அதேபோல் வடக்கு தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள பல தமிழ் கைதிகளை நாம் விடுதலை செய்துள்ளோம். பலரை நாம் விடுதலை செய்யவுள்ளோம். தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
காணாமல்போனோர் தொடர்பாக தற்போது 2000 கோப்புகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியவற்றையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு | Resolution Of Tamil Problem Before Independence
இதேவேளை, அடுத்த வாரம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் வருவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்க்கிறேன். இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்ளும் தேவை எவருக்கும் இல்லை. உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொண்டு முன்னோக்கி செல்லவே எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்