ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாம் இலங்கைக்கு செல்ல தமிழக அரசு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என சாந்தன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேர் நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்காக போராட்டம்
ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court
இந்த நிலையில் வேலூர் சிறைச்சாலையிலுள்ள முருகன் மற்றும் சாந்தனை சட்டத்தரணி ராஜகுரு நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தமது விடுதலைக்காக போராடிய சட்டத்தரணிகள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்ராலின், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அவர்கள் நன்றியை தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முருகன் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மனைவி நளினியுடன் இணைந்து வாழவுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? அல்லது லண்டன் செல்வதா என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் முருகன் தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.
ஆலய வழிபாடு
ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court
இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடவுள்ளதாகவும் சாந்தன் தெரிவித்தார்.
மேலும் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாகவும் கடவுச் சீட்டு காலாவதியாகியுள்ளமையினால் அதனை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் 6 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
நளினி சிறையில்
ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court
இதேவேளை, நளினியின் விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்காமையினால் இன்று சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு இல்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்