முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 206 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 27/11/2022 பிற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பொதுச்சுடரை வீரவேங்கை பிதாபன் அவர்களின் தாயார் நம்பிராஜ் சாறுதா ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்த்திரேலியா தேசியக்கொடியை திரு. ஜோன் றேவன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை திருமதி. செறினா டானியல் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்தவரும் மற்றும் மேஜர் கமல், 2ம் லெப்ரினன்ட் பல்லவி அவர்களின் சகோதரர் திரு. ஈசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரை மேஜர். நளன் அவர்களின் சகோதரி திருமதி. சிவேந்திரா தங்கவேல் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து துயிலும் இல்லப் பாடலுடன் அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்கள். அடுத்து தாயகவிடுதலைப் போரிலே எமது தாய் நாட்டை மீட்பதற்காக இந்தியா மற்றும் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைநிகழ்வுகளுடன் அரங்க நிகழ்வு இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பங்குபற்றியமை அனைவருக்கும் நிறைவாக அமைந்தது. இந்நிகழ்வு ஏற்பாடுகளில் பங்களித்த தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் கலந்துகொண்ட தேசப்பற்றுமிக்க மக்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக செய்வோம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். class="separator" style="clear: both;">

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?