புலம்பெயர் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள ஊக்குவிப்புத் தொகை - அரசாங்கத்தின் புதிய திட்டம்
இலங்கைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் வௌிநாட்டு நாணயங்களுக்கான புதிய ஊக்குவிப்புத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தனியொரு பணப் பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளது.
ஊக்குவிப்பு பணம்
புலம்பெயர் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள ஊக்குவிப்புத் தொகை - அரசாங்கத்தின் புதிய திட்டம் | New Incentive Foreign Remitta Migrant Workers Cbsl
உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து ஊக்குவிப்பு பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இது உரிமம் பெற்ற வங்கிகளில் பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு மட்டுமே பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்