முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 177 காலநிலை மாற்றத்தால் ஆண் உயிர் இனம் இல்லாமல் போகலாம்,

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள்
காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன. அதில் சில மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாததாகவும் உள்ளன. சைபீரியாவில் ‘பெர்மஃப்ரோஸ்ட்’ எனப்படும் பனிப்படலத்தால் மூடப்பட்ட மண் படுகைகள் உள்ளன. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக உறைந்து போன நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு புவி வெப்பமயமாதலை காரணமாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். வெப்பநிலை பூமிக்கடியில் இருக்கும் வாயுக்களை வெடிக்க வைத்து, பள்ளங்கள் உருவாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆர்டிக் பகுதி நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா? அனுகூலமா? 1 அக்டோபர் 2022 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா? 12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன? 10 நவம்பர் 2022 பூமியிலிருந்து நிலவின் இருளான பகுதிக்கு இரவில் பிரதிபலிக்கப்படும் சூரிய ஒளியை அளந்து அதனை ‘எர்த் ஷைன்’ அல்லது 'அல்பெடோ' (albedo) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். கிழக்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள தாழ் மேகங்களின் எண்ணிக்கை பெருங்கடல் வெப்பமயமாதலால் குறைந்து கொண்டு வருகிறது. இந்த மேகங்கள் ஒரு கண்ணாடியை போல செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும். எனவே அந்த மேகங்கள் இல்லாமல் போனால் வெளிச்சம் குறைந்துவிடும். எனவே வெப்பமயமாதல் பூமியை இருளாக்கி வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஊர்வனவற்றின் பாலின மாற்றம் புவி வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. சில உயிரினங்கள் ஆச்சர்யமிக்க வகையில் புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படுகின்றன. சில ஊர்வன உயிரினங்களில் அதன் முட்டை அடைகாக்கப்படும் சமயத்தில் உள்ள வெப்பம்தான் பகுதியளவில் அதன் பாலினத்தை முடிவு செய்யும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் சென்ட்ரல் பியர்டட் ட்ரேகன்ஸ் (central bearded dragons) எனும் ஒரு வகை பல்லிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அடைக்காக்கப்பட்டால் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுகள் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக மாறிவிடும். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் எல்லாம் பெண்ணாக மாறிவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். அதேபோல பெருங்கடலில் பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்தால், மீன்கள் தனது வாசனை சக்தியை இழந்துவிடும். அதேபோல ஒரு முழுமையான உணவு சங்கிலித் தொடர் வெப்பமயமாதலால் மாறியுள்ளது. படக்குறிப்பு, கிரேட் டிட் பறவைக் குஞ்சுகள் மிளகாய் சாஸுக்கு வந்த தட்டுப்பாடு அதீத வெப்பநிலை உணவுப் பொருட்கள் வளர்வதையும் கடினமாக்குகிறது. கோதுமை, மக்காச் சோளம் மற்றும் காஃபி பயிர்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் சில பயிர்களின் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள ஹை ஃபாங் புட்ஸ் என்னும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் பாட்டில் பச்சை மிளகாய் சாஸை தயாரித்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் பச்சை மிளகாய் உற்பத்தி குறைந்து வருவதால் தனது வாடிக்கையாளர்கள் சாஸை குறைவாக பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜான் வகை கடுகுகள் கோடைக் காலத்தில் ஃபிரான்ஸில் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் 'டிஜான்' வகை கடுகுகள் தங்களிடம் இல்லை என தெரிவித்தது. இந்த வகை கடுகு கனடாவில்தான் அதிகம் விளைகிறது. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது. அதேபோல பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கார்பன் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஃபிரான்ஸில் போதுமான குளிர்ந்த நீர் இல்லை என்ற காரணத்தால் இடிஎஃப் என்ற ஆற்றல் நிறுவனம் ஃபிரான்ஸில் உள்ள அணு ஆலைகளில் உற்பத்தியை குறைத்தது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை கூட்டத்தில் 200 நாடுகள் இணைந்து கார்பன் பயன்பாட்டை குறைப்பதாக ஒப்புக் கொண்டன. புவி வெப்பமயமாதல் பல பிரச்னைகளை நாளுக்கு நாள் ஏற்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் மேலும் பல ஆச்சரியமான தாக்கங்களை நாம் எதிர்கொள்ளவும் தயாராகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?