புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற உள்ளன.
அதற்கான தயார்ப்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கிராமம் மக்களால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் கௌரவிப்பு
புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins
அதேவேளை கிளிநொச்சி மருதநகர் பகுதியில் மாவீரரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மருதநகரில் ஏற்பாட்டு குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்பொது மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோருக்கு தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாலிகிதன் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins
மேலும், கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தையடிப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் வட்டக்கச்சி ஏற்பாட்டு குழுவினரால் மாவீரன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாலிதன் அவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்