மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை!
மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அல் மஜ்மா நகர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சீனிமுகம்மது முகம்மது காசிம் வயது (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
இச் சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்று வியாழக்கிழமை (25-11-2022) இரவு மேற்படி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையினை கிராமத்தவர்கள் சத்தமிட்டு துரத்தியுள்ளனர்.
குறித்த யானையானது கிராமத்தினை விட்டு சென்று விட்டதாக எண்ணி வீட்டின் வளவினுள் இருந்தபோது திடிரென அங்குவந்த யானை முதியவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
மனைவி அன்றைய தினம் ஓட்டமாவடிக்கு உறவினர்களை சென்றதனால் தனிமையிலேயே இவர் இருந்துள்ளார்.
மறு நாள் காலையிலே இவரது நடமாட்டம் காணப்படாத நிலை கண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
இதேவேளை வாழைச்சேனை கடதாசி ஆலையை அண்மித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த காட்டு பகுதியினை அகற்றி தருமாறும் கேட்கின்றனர்.
யானைகளின் அட்டகாசம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் பல முறை தெரிவித்தும் கவனிக்காமல் உள்ளதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்