முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 789 சிங்களவர்களிற்கு ஒற்றை ஆட்சிக்கு அங்கிகாரம் வழங்கிவிட்டு அவர்கள் பிளை விடுவது போல் நடிக்கும் சிறிதரன் எம்பி

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : உண்மையை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் சிறிதரன்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தைக் கருப்பொருளாகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பரிந்துரைகளை முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் ஏன் அவதானம் செலுத்தவில்லை. தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்வரும் நாள்களில் பகிரங்கப்படுத்துவேன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் – சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் சபைக்கு இரண்டு பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பில் நாடபாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தால் முரண்பாடற்ற ஒருமித்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் விவாதத்தின் போது தான் நாணய நிதியத்துடனான நிபந்தனைகளின் பொழிப்புகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை ஏமாற்று செயற்பாடாகும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச சமூகத்தின் அழுத்தம் போதுமானதாக இல்லை.நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான செயற்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்த பின்னணியில் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு, பொருளாதார மீட்சியடைந்த பின்னர் தமிழ் இனத்துக்கு எதிரான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கும் முனைப்புக்களே காணப்படுகின்றன. தமிழ் சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட யுத்தத்தால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. நாட்டின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராக மீண்டும் அழிப்பை தொடர்வதற்காகவா நாணய நிதியம் நிதி வழங்குகியுள்ளது என்பதை உயர்ந்த பட்ச சபை ஊடாகக் கேட்கிறோம். அரசியல் பிரச்சினை காரணமாகவே பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது, பொருளாதாரப் பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பிரச்சினையை மூடி மறைக்க முடியாது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனவாதம் நாட்டின் பிரதான கருபொருளாக உள்ளது. இனவாத சிந்தனை ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளங்களில் காணப்படுகின்றன. நாட்டில் இனவாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு ஊடாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும். தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது. இதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என்று நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடம் கேட்கிறேன். – என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?