முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 763 இந்தியாவின் வரலாற்று துரோகம்..!

இந்தியாவின் வரலாற்று துரோகம்..!
ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கித் தருவோம் என கூறிய இந்திய வல்லரசு கடந்த காலத்தில் எமது மண்ணுக்கு வந்து தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாது மிகப்பெரும் துரோகங்களை தவறுகளை செய்துள்ளது. அந்த துரோகங்கள், தவறுகளுக்கு இந்தியா பிராயசித்தம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாயை நினைவு கூருவது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்கு கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல. மாறாக போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து நினைவு நிகழ்வை முன்னெடுக்கின்றோம். இந்தியாவின் பங்கு..! இந்தியாவின் வரலாற்று துரோகம்..! | Indias Historical Betrayal Of Sri Lanka
ஆனால் வெறுமனவே விளக்கேற்றி மௌனமாக செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். இந்தியா செய்த வரலாற்று துரோகத்தையும் இலங்கை அரசு செய்த வரலாற்று துரோகத்தையும் கொடுமைகளையும் மறைப்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல கடந்த காலத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டது ஏன் என்றால் திலீபனை சாகடித்ததில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது அது மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. எனவே உண்மையில் இந்த நினைவேந்தல் ஊடாக இளம் தலைமுறைக்கு இந்த வரலாற்றுபணியை கொண்டு செல்கின்றோம். ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனி நாடு உருவாக்கித் தருவோம் என்று இந்திய வல்லரசு கூறியது. ஆனால் இந்திய அரசு எமது மண்ணுக்கு வந்து உரிமைகளை பெற்றுத்தராதது மட்டுமல்ல எங்கள் மீது கொடுமைகளை அறங்கேற்றியிருக்கின்றது. அன்னை பூபதியம்மா உயிர்நீத்து 35 வருடங்கள் சென்றும் இன்று கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையாக இருக்கின்ற ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தசட்டத்தை ஏற்கவேண்டும் என தமிழ் மக்களின் தலைமைகளை கொண்டே பேசவைக்கின்ற ஒரு துயரமான நிலைமை உள்ளது. இந்த உண்மைகளை எங்கள் மக்களும் இளம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?