முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 754 அரசகைக்கூலிகளின் கருத்துருவாக்கம் அரசை நோகதாபடி பார்த்துக்கொள்ளும் இவர்களின் அறிவாற்றல்?

வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை; வடக்கு ஆளுநர்!
அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை எனவும் சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணிகளையே வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வட மாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் 51 ஆவது காலால் படை ஆகியன இணைந்து யாழ். துரைப்பா விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த புது வருட விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே ஜீவன் தியாகராஜா இதனை தெரிவித்தார். இந்நிலையில் வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதில் அளித்த ஆளுநர், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை; வடக்கு ஆளுநர்! | Lands Are Not Given To Foreigners Governor இதன்போது வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் அவர்களின் சரியான திட்டங்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. வடக்கில் முதலீடு செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையில் யாரும் விண்ணப்பித்துள்ளார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. அவ்வாறு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு தேவையான காணிகளை இனம் கண்டு கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண காணித் திணைக்களம் அதற்கான பணிகளைச் செய்வார்கள். மேலும் அரசாங்கம் காணி வழங்குவதாயின் நாடுகளுக்கு காணிகளை வழங்குவதில்லை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?