ரஷ்யாவின் நோக்கம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை தகவல்..!
உக்ரைன் படையெடுப்பிற்கான முக்கிய நோக்கங்களை பராமரிக்க ரஷ்யா போராடி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனிய தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து இருந்தாலும் கிழக்கு பகுதி நகரங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான முக்கிய நோக்கத்தை பராமரிக்க ரஷ்யா போராடி வருகிறது என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நோக்கத்தில் விரிசல்
MOD report Ukraine
உக்ரைனை நாஜிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் ரஷ்யா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் உக்ரைனில் "நாஜிக்கள்" இருக்கிறார்களா என்று வாக்னர் குழுமத்தின் உரிமையாளர் எவ்ஜெனி ப்ரிகோஜின் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை குறிப்பிட்டு ரஷ்யாவின் நோக்கத்தில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவின் வருடாந்திர இம்மார்டல் ரெஜிமென்ட் அணிவகுப்புகளை இரத்து செய்வதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அடிப்படையில் அணிவகுப்புகளை இரத்து செய்ததாக ரஷ்யா கூறுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்