முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 772 நெடுந்தீவுகொல்லப்பட்டவர்களின் விரம்?

நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! | Jaffna Neduntheevu Murder Police Investigation 100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! | Jaffna Neduntheevu Murder Police Investigation இரண்டாம் இணைப்பு
நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. முதலாம் இணைப்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் நெடுந்தீவிற்கு சென்றுள்ளனர். படுகொலை தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த ஆறு பேர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு தயாராகும் அதிகாரிகள் நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! | Jaffna Neduntheevu Murder Police Investigation இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளர் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த போதே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது தாக்குதலுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள வயோதிபப் பெண், கனகர் பூரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொலை இடம்பெற்றமைக்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையிலேயே யாழிலிருந்து மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?