தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப தமிழீழத்தை அடைய ஏதாவது தொடர்ந்து செய்வார்களா என்பதை மக்கள் அவதானிக்க வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு
ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேசரீதியாக ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர், அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழீழ அரசியல் துறையினர் சர்வதேச ரீதியாக 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தமது பணிகளை முன்னெடுத்து வரும் இவ்வேளை, அவுஸ்திரேலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
மக்கள் சந்திப்பு
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு | Meeting Tamil Eelam Political Sector In Australia
கடந்த 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்(NSW) மாநிலத்தில் உள்ள தூங்காபி (Toongabbie) நகரில் தமிழீழ அரசியல் துறையினரால் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவின் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது. சந்திப்பின் போது அரசியல் துறையின் தொடர் பயணமும் அதன் தேவையும் மேலும் அரசியல் துறையின் தற்போதைய நிர்வாகப் பொறிமுறை பற்றி அருந்தவம்( மணி) அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
உறவுகளின் கேள்விகளுக்கு பதில்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு | Meeting Tamil Eelam Political Sector In Australia
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.
இதில் குறிப்பாக தேசியம் சார்ந்து இயங்கும் கட்டமைப்புகளுடனான உறவு பற்றியும் அவர்களுக்கான ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக உரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் தமிழீழ அரசியல் துறையின் அவுஸ்திரேலியா நிர்வாக பொறுப்பாளர்கள் தேசிகன் மற்றும் ஜொனி போன்றவர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றன.
தமிழக உறவுகளும் கலந்துகொண்டு
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு | Meeting Tamil Eelam Political Sector In Australia
இச்சந்திப்பில் தேசிய செயற்பாட்டாளர்கள், உறவுகள் மட்டுமல்லாது, தமிழக உறவுகளும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச பார்வையாளர்களாக அரசியல் துறையின் சர்வதேச பொறுப்பாளர்களும் இணைய வழியாக கலந்து கொண்டார்கள். இவ் மக்கள் சந்திப்பானது சிறப்புற அமைந்தது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்