முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“d 714 புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்”

“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” - அபாய அறிவிப்பை வெளியிட்டார்
அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட படுமோசமானது என கடுமையாக எச்சரித்துள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன். சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த அபாய அறிவிப்பை வெளியிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்துக்கு மேலதிக பலம் “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” - அபாய அறிவிப்பை வெளியிட்டார் அம்பிகா | The New Law Is Many Times Worse “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மேலதிக பலத்தை வழங்குகின்றது. இராணுவம் கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது. தற்போது உள்ள சரத்தின்படி ஒருவரை தடுத்து வைக்க பிரதி காவல்துறை மா அதிபர் அனுமதி வழங்க முடியும்,காவல் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர்ந்தால் அதனை பயன்படுத்த முடியும்.முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார். அதிபருக்கு மேலதிக அதிகாரம் “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” - அபாய அறிவிப்பை வெளியிட்டார் அம்பிகா | The New Law Is Many Times Worse தற்போதுள்ள புதுச் சட்டம், அதிபருக்கான அதிகாரத்தில் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில் மேலும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். அது நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும். ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் முடியும். அதற்கு காவல்துறை மா அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?