முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 734 தமிழ் - சிங்கள மக்களிடையே வெடித்த மோதல் : இது தான் காரணமா

தமிழ் - சிங்கள மக்களிடையே வெடித்த மோதல் : இது தான் காரணமா..!
ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தலைநகரமான திருகோணமலை மிக நீண்டகாலமாக சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்தப்பட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. சிறிலங்காவை பொறுத்தவரை நிலங்களும் மலைகளும் காடுகளுகளும் கூட தமக்கே உரியது என்ற மகாவம்ச மனோநிலை கொண்ட தென்னிலங்கை சிங்களவர்களினதும் அவர்களது அரசியல் பிரமுகர்களின் திட்டமிட்ட நடவடிக்கையினால் ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியானது பருத்தித்துறை முனை தொடங்கி அம்பாறையின் எல்லை கிராமங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டு இன்றுவரை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகமெங்கிலும் பரந்துவாழும் ஈழத் தமிழர்கள் தங்களின் தலைநகரம் என்று கொண்டாடும் திருகோணமலை என்பதும் மிக மோசமான அபகரிப்புகளுக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கும் உட்பட்டதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அப்பகுதியில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையிலான மோதல் சம்பவம் பூதாகரமான ஒருவிடயமாக பார்க்கப்பட்டு வந்தது. அம்பாந்தோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான ஆலயக் காணியொன்றில் குடியமர்த்தப்பட்ட வஜிதபுர என்ற சிங்கள ஆக்கிரமிப்பு கிராமம் பற்றியும், அன்றைய நாளில் திருக்கடலூர் வாழ் தமிழர்கள் மீது அவர்கள் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல் சம்பவம் பற்றியும் விரிவான விபரங்களை பகிர்ந்து கொள்கிறது ஐபிசி தமிழின் இவ்வார நெற்றிக்கண்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?