போதைப்பொருள் கடத்தல்: சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
suppiah.jpg
Tangaraju Suppiah Credit: Public Domain
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது.
சிங்கப்பூரை சேர்ந்த தங்கராஜு சுப்பையா, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Advertisement
இத்தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட நிலையில், இன்று அவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தலுக்கு மரண தண்டனை விதிப்பதா என, தங்கராஜுவின் மரண தண்டனை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு வலியுறுத்தியிருந்தது.
ஆனால் சிங்கப்பூரை பாதுகாக்கும் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை ஒரு முக்கிய அங்கம் என்று சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. இதன்கீழ் கடந்த ஆண்டு மட்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அறிவுசார் குறைபாடு உடையவரும் ஒருவரும் அடங்குகின்றார்.
மரண தண்டனை குறித்த சிங்கப்பூரின் கடுமையான விதிகளுக்கெதிராக, மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் குரல்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்