விடுதலைப் புலிகள் என்பது அவமானமா? மாவையின் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை !!
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை 'புலி' என வர்ணிப்பது எங்களுடைய இனத்தை அவமதிக்குபடியான செயல் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்த விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது.
'புலிகள்தான் தமிழர்கள் தமிழர்கள்தான் புலிகள்' என்றும், 'விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏகபிரதிநிதிகள்' என்றும் கூறி தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரித்து நாடாளுமன்றம் சென்ற தமிழரசுக் கட்சி, இன்றைக்கு அனைத்தையுமே மறந்து சானக்கியனை விடுதலைப் புலி என்று கூறியதை ஒரு அவமானமாகப் பார்ப்பது வியப்புக்கு உரியதான இருக்கின்றது.
இத்தனைக்கும் சாணக்கியனே தன்னை விடுதலைப் புலி என்று கூறியதை ஒரு பெருமைக்குரிய விடயமாகத் தான் கருதுவதாக நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கூற்றை ஒரு அமானமாகக் கருதுவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜரா தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் அடையாளமா அல்லது அவமானமா? தமிழரசுக் கட்சி தெளிவாக தமிழ் மக்களுக்கு கூறவேண்டும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளை விடுதலைப் புலிகள் என்று கூறுவது அவமரியாதை என்று கூறியது மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழரசுக் கட்சியின் கருத்தா?
மாவை சேனாதிராஜா தமிழ் மக்களுக்கு பதில் கூறவேண்டும்.
அல்லது தமிழ் மக்கள் மாவை சேனாதிராஜாவை பதில் கூறவைக்கும்படி செய்யவேண்டும்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்