பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன்
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில் அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தமிழ் இளைஞரொருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் லண்டனில் வைத்து கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் என்ற இடத்தில் ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பரிமாற்ற மோசடி
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன் | American Immigrant Tamil Youth Arrested
இவர் அமெரிக்காவில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் பணப்பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இவரை கைது செய்து நாடு கடத்தும்படி, அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியளித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில், பிரித்தானியா வேல்ஸ் பகுதியை சேர்ந்த 50 வயது நபரை, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
ஹிஸ்பல்லா என்ற பயங்கரவாத அமைப்பு
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன் | American Immigrant Tamil Youth Arrested
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுந்தர் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு, நஸீம் அஹமது நிதி உதவி அளிப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசுகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்